சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் மே 8 அன்று அறிவிக்கப்பட்டன. தேர்வெழுதிய 7.92 லட்சம் மாணவர்களில் 7 லட்சத்து 53,142 பேர் (95.03%) தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்யலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற விரும்பும் மாணவர்கள், நாளை முதல் 17-ம் தேதி வரை தங்கள் பள்ளிகள் மூலமாகவும், தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து பாடங்களுக்கும் ரூ. 275 கட்டணம் வசூலிக்கப்படும். மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலைப் பெற விண்ணப்பிக்கும்போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்கள் முடிவுகளைச் சரிபார்க்க முடியும். மேலும், விடைத்தாள் நகலைப் பெற்றவுடன், மறு எண்ணிக்கை அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.