சென்னை: சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்து, சரிந்து வருகிறது. ஏப்ரல் 22 அன்று, பவுனுக்கு தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.74,320 ஐ எட்டியது. பின்னர் விலை படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, தங்கத்தின் விலை இன்றும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை கிராமுக்கு ரூ.250 அதிகரித்து, கிராமுக்கு ரூ.9,025 ஆகவும், பவுனுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.72,200 ஆகவும் உள்ளது.