சென்னை: அமெரிக்காவின் பிரபல பைனான்ஸ் நிறுவனம் ஃபேனி மே, சுமார் 200 ஊழியர்களை பணியிடத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த ஊழியர்கள், நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் பொருளாதார உதவிகளை தவறாக பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகமானவர்கள் தெலுங்கு மொழி பேசும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், ஃபேனி மே நிறுவனத்தில் பணியாற்றிய 200 இந்திய-அமெரிக்க ஊழியர்கள், நிதி உதவிகளை மோசடியில் பயன்படுத்தி பல கோடிகள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஃபேனி மே நிறுவனத்தின் “grants programme” என்ற திட்டம், நிறுவனம் ஊழியர்களின் வரி குறைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் முறையாக செயல்படுகிறது. ஆனால், தெலுங்கு ஊழியர்கள் சிலர் இத்திட்டத்தை முறையாக பயன்படுத்தாமல், பொய்யான தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அல்லது தங்கள் சொந்த நிதி உதவிகளை திருடி அந்த பணத்தை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
இந்த நிதி மோசடியின் படி, ஊழியர்கள் அவர்களின் சொந்த தொண்டு நிறுவனங்களுக்கு பணம் கொடுத்ததாகக் காட்டி, அவற்றின் மூலம் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். பின்னர் அந்த நிதி தாங்களே திருப்பி எடுத்துக் கொண்டு, வரி விலக்கை பெற்றனர். இதனால்தான், ஃபேனி மே நிறுவனம் இவ்வாறான 200 ஊழியர்களை பணியிடத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இந்த முறைகேடு மற்றும் அதன் விளைவுகள், ஆப்பிள் நிறுவனத்தில் ஏற்பட்ட சம்பவத்தைப் போல் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலங்களாக, ஆப்பிள் நிறுவனமும் சுமார் 185 தெலுங்கு ஊழியர்களை நிதி மோசடி குற்றத்தில் பணியிடத்தில் இருந்து நீக்கியது. இது, சமூக பங்களிப்புக் கொடுப்பதை ஊக்குவிக்கும் CSR திட்டம் போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் முயற்சிகளின் தொடர்ச்சியாக உள்ளது.
இது நிதி மோசடியில் ஈடுபட்ட 200 தெலுங்கு ஊழியர்களையும் சீரியர் மேனஜர் நிலைகளில் இருந்தவர்கள் மற்றும் இந்நிலையில் பலர் பிளாக் லிஸ்டு செய்யப்பட்டுள்ளார்கள்.