குஜராத்: பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அமுல் நிறுவனம் இன்று 1ம் தேதி முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துகிறது இதை குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் குஜராத் கூட்டுறவு பால் சங்கமானது, நாடு முழுவதும் மே 1, 2025 முதல் பாக்கெட் பாலின் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையில், ஜூன் 2024 முதல் பாக்கெட் பாலின் விலையை அதிகரிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமுல், 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
இன்று முதல் 500 மில்லி லிட்டர் அமுல் கோல்டு பால் பாக்கெட் ரூ.34-க்கும், 1 லிட்டர் பால் பாக்கெட் ரூ.67-க்கும் விற்பனை செய்யப்படும். ‘சக்தி’ வகையின் 500 மில்லி பாக்கெட் பால் ரூ.31-க்கும், 500 மில்லி பசும்பால் பாக்கெட் ரூ.29 ஆகவும், ஒரு லிட்டர் எருமைப் பால் பாக்கெட் ரூ.73 ஆகவும், ஒரு லிட்டர் ‘டாசா’ பாக்கெட் ரூ.55 ஆகவும் விற்பனை செய்யப்படும்.