பிக்சட் டெபாசிட் என்பது குறைந்த ஆபத்துடன் அதிக நிகர வருமானம் தரக்கூடிய முதலீட்டு விருப்பமாக இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலீட்டாளர்கள் பெரும்பாலும் வங்கித் திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுவதற்குக் காரணம், வட்டி வருவாய் உறுதி செய்யப்பட்டதாகும். ஆனால், சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இரண்டு முறை ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளதால், தற்போது பேசிக் பாயிண்ட் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை வட்டி விகிதம் குறைந்ததின் விளைவாக, வங்கிகளின் கடன்கள் மட்டுமின்றி, பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களும் மாறியுள்ளன. முக்கியமாக, எஸ்பிஐ, ஐசிஐசிஐ மற்றும் எச்.டி.எப்.சி. வங்கிகள் வெவ்வேறு கால பரிமாணங்களில் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.
எஸ்.பி.ஐ.வின் ‘அம்ருத் விருஷ்டி’ என்ற திட்டம் மூத்த குடிமக்களுக்கு 7.65 சதவீத வரை வட்டி வழங்குகிறது. அதே நேரத்தில் HDFC வங்கி 15 முதல் 21 மாதங்களுக்குள் உள்ள டெபாசிட்களுக்கு சிறப்பு வட்டி அளிக்கிறது. ICICI வங்கியும் 18 முதல் 24 மாதங்களுக்கு 7.60 சதவீதம் வரை வட்டி அளிக்கிறது.
SBI-யின் பொதுவான வட்டி விகிதங்களைப் பார்க்கும் போது, 7 முதல் 45 நாட்கள் வரை வைப்பதற்கு 3.5% வட்டி, 180 முதல் 210 நாட்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு இந்த விகிதங்கள் 0.50 சதவீதம் அதிகமாக வழங்கப்படுகின்றன.
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை 6.7% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.2% வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டு FD-க்கு, எஸ்.பி.ஐ. 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50% அளிக்கிறது.
ICICI வங்கியின் FD விகிதங்களும் அதேபோல் அமைந்துள்ளன. குறுகிய கால வைப்புகளில் 3% தொடக்கம், 2 ஆண்டுகள் FD-க்கு 6.90% வரை பொதுமக்களுக்கு மற்றும் 7.40% வரை மூத்த குடிமக்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது.
HDFC வங்கியிலும் FD விகிதங்கள் மிகவும் போட்டியானவை. 2 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் பிக்சட் டெபாசிட்களுக்கு பொதுமக்களுக்கு 6.90%, மூத்த குடிமக்களுக்கு 7.40% வரை வட்டி வழங்கப்படுகிறது.
மொத்தமாக பார்க்கும்போது, மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கிகள் சிறப்பு விகிதங்களை வழங்கி வருகின்றன. வட்டி விகிதங்களில் இந்த மாற்றங்கள் பணவீக்கக் கட்டுப்பாட்டை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே, முதலீட்டாளர்கள் வட்டி விகித நிலவரங்களை கவனித்து, கால பரிமாணத்தின் அடிப்படையில் சிறந்த திட்டத்தை தேர்வு செய்தால் அதிக நன்மை கிடைக்கும்.