உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நிச்சயமற்ற சூழல்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் அனைத்து நாடுகளிலும் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.

இந்த திடீர் சரிவால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பி, தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த சனிக்கிழமை (12.04.2025) சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (14.04.2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,755-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,250-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.120 குறைந்து, ரூ.58,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையின் இந்த மாற்றங்கள் முதலீட்டாளர்களை கவலைப்படுத்துகின்றன, மேலும் தங்க நகைகள் விற்பனையும் அதிகரிக்கலாம்.