சென்னை: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்க நகைகளின் விலை இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கத்தை மிகவும் பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கிறார்கள். இதன் காரணமாக, மக்கள் வழக்கமாக தங்கத்தை நகைகள் மற்றும் நாணயங்களாக வாங்குகிறார்கள்.
உலகில் தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சர்வதேச பொருளாதார மற்றும் சந்தை நிலைமைக்கு ஏற்ப தங்கத்தின் விலைகள் ஏற்ற இறக்கமாக உள்ளன. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள் இவை. கடந்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில், இந்தியாவில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்தது.

ஜூலை 23 அன்று, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த சூழ்நிலையில், 6-ம் தேதி, தங்கத்தின் விலை மீண்டும் ரூ.75,000ஐ தாண்டியது. 8-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் ரூ.75,760-க்கு விற்கப்பட்டது.
அதன் பிறகு, தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தது. ஆகஸ்ட் 9 முதல் தங்கத்தின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று சென்னையில், 22 காரட் நகை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, கிராமுக்கு ரூ.9,235-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.320 குறைந்து, பவுனுக்கு ரூ.73,880-க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.43 குறைந்து, கிராமுக்கு ரூ.10,075-க்கும், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து, கிராமுக்கு ரூ.7,635-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,27,100-க்கு விற்கப்படுகிறது.