இன்றைய நிதி சூழலில் கிரெடிட் கார்டுகள் பெரும்பாலானவர்களிடம் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறியுள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு கிரெடிட் கார்டை வைத்துள்ளனர். ஆனால் அதைப் பயன்படுத்தும் போது சில அடிப்படை விஷயங்களை தவிர்த்துவிட்டால், நிதிச் சிக்கல்களில் சிக்க நேரிடும். சில சின்ன வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்தச் சிக்கல்களிலிருந்து தப்பிக்க முடியும்.

முதலில், கிரெடிட் கார்டின் பயன்படுத்தும் அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். நீங்கள் வைத்திருக்கும் லிமிட்டில் 30% அளவுக்கு மட்டுமே பயன்படுத்தி, பில்களை முற்றிலும் செலுத்த வேண்டும். இது சிபில் ஸ்கோரை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
கிரெடிட் கார்டில் 45 நாட்கள் வரை வட்டி இல்லாத காலம் வழங்கப்படுகிறது. ஆனால் இது பொருட்கள் வாங்கியபோதுதான் பொருந்தும். கேஷ் wthdraw செய்தால் அன்றிலிருந்தே வட்டி, ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
உங்களுக்கு ஏற்ற வகை கார்டை தேர்வு செய்யும் போது ரெகுலர், கேஷ்பேக், ப்ரீமியம் போன்ற வகைகளில் என்ன உங்களுக்குத் தேவையோ அதையே தேர்ந்தெடுக்க வேண்டும். வங்கிகள் பல சலுகைகள் அளிப்பதாகக் கூறினாலும், அந்த சலுகைகளின் பின்னணி நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டின் பில் தொகையை கட்டுவது மாதம் முடிவுக்குள் இல்லாமல், சிபில் ஸ்கோரில் நேர்மறை தாக்கம் ஏற்படும்படி முன்னதாகவே கட்டுவது சிறந்தது. குறிப்பாக, மாதத்தின் முதல் நாளன்று சிபில் ரிப்போர்ட் பதிவாகும் என்பதால், பில் தேதிக்கு முன்பே கட்டிவிடுவது நல்லது.
கிரெடிட் கார்டுகளில் இருக்கும் நுழைவு கட்டணம், ஆண்டு கட்டணம், தாமதக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளும் புரிந்திருக்க வேண்டும். ரிவார்ட் பாயின்ட்ஸ் அல்லது கேஷ்பேக் போன்ற வசதிகளை முன்னிறுத்தி வழங்கப்படும் கார்டுகளில் கூடுதல் கட்டணங்கள் இருப்பது வழக்கமாகும். ‘லைஃப்டைம் ஃப்ரீ’ என்ற வார்த்தைக்கு உடனடியாக நம்பிக்கை கொள்ளாமல் நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டும்.
மற்றொரு முக்கியமான விஷயம், சில கடைகள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது கூடுதல் 2% சார்ஜ் வசூலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சூழ்நிலையில், ரூபே கிரெடிட் கார்டை யு.பி.ஐயுடன் இணைத்து செலுத்துவது பயனுள்ளதாக இருக்கும். விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் தற்போது யு.பி.ஐ வசதியுடன் வேலை செய்யவில்லை.
மினிமம் பில்தொகை மட்டும் செலுத்துவதன் மூலம் தாமதக் கட்டணங்கள், வட்டி மற்றும் ஜிஎஸ்டி சேர்ந்து, நிலுவையில் இருக்கும் தொகை பலமடங்கு அதிகரிக்கக்கூடும். அதனால், எப்போதும் பிலை முழுமையாகக் கட்டிவிடுவதே பாதுகாப்பானது.
சில கார்டுகளில் ரிவார்ட் பாயின்டுகளை பயன்படுத்தி வவுச்சர்களை பெறுவதற்கே கூட கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். இந்த வகையான மறைமுகச் செலவுகளையும் முன்னே அறிந்து வைத்திருக்க வேண்டும்.
மொத்தத்தில், கிரெடிட் கார்டு நன்கு நிர்வகிக்கப்பட்டால் நிதி சுதந்திரத்திற்கு ஒரு நன்மைதரும் கருவியாக இருக்க முடியும். ஆனால் அதே நேரத்தில், கவனக்குறைவால் இது நிதிச் சுமையிலும் மாறிவிடும். எனவே சிக்கனத்துடன், தெளிவான திட்டமிடலுடன் பயன்படுத்துவது அவசியமாகும்.