தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் பல மீனவ பெண்கள் சங்கு, சிப்பி, கடல் பாசிகள் போன்றவற்றை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டதால், மீன்பிடி முக்கிய தொழிலாக இருப்பது வழக்கமான சூழ்நிலையாகும்.

பொதுவாக மீனவ பெண்கள் நண்டு பிடித்தல், கடல்பாசி சேகரித்தல் மற்றும் கரையோரங்களில் கருவாடு உற்பத்தி போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தற்போது தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகியதால், ஆண்கள் வருமானமின்றி இருக்கின்றனர். இதன் விளைவாக, பெண்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தைச் சமன்செய்ய கைவினை பொருட்கள் தயாரிப்பில் தங்களை இணைத்துள்ளனர்.
இந்த சிறு தொழிலை மேற்கொள்கிற சுகந்தி என்ற மீனவ பெண் தற்போது பலர் பயிற்சி வழங்கி வருகிறார். சங்கு, சிப்பிகளை பயன்படுத்தி வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் தயாரிப்பதன் மூலம் ஒரு மாதத்திற்கு ₹10,000 முதல் ₹15,000 வரை வருமானம் கிடைக்கிறது என அவர் கூறுகிறார்.
சிறு வயதிலிருந்தே கடலோர தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்தக் பெண்கள், தற்போது சிப்பிகளை வைத்து தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மூலம் தடைக்காலத்தில் வாழ்வாதாரத்தை பாதுகாக்கின்றனர். இந்த முயற்சியில் தன்னார்வலர்களும், அருகிலுள்ள பெண்களும் பயிற்சி பெற்று தொழில் தொடங்கியுள்ளனர்.
இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில், அனுகிரகா டிரஸ்டை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இத்தொழிலில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கைவினை பொருட்கள் தயாரிப்பு மீனவ சமூகத்துக்கு ஒரு மாற்றுவழித் தொழிலாக அமைந்துள்ளது.