இந்த வாரத்தின் தொடக்க நாட்களில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. முகூர்த்த நாட்கள் தொடங்க உள்ள சூழலில், திருமண ஏற்பாடுகள் செய்து வருபவர்கள் தங்க விலை அதிகரிப்பால் அச்சமடைந்தனர். ஆனால் இன்று விற்பனைத் திரையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி காணப்பட்டது. இது இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவரனுக்கு ரூ.280 வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.71,800 இருந்து ரூ.71,520 ஆக குறைந்தது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.8,940 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோயம்புத்தூர், நெல்லை ஆகிய நகரங்களிலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,975 ஆக உள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்க விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டது. இது திருமண பருவத்திற்கு முன்பாக மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் தங்களது முதலீடுகளையும் சேமிப்புகளையும் தங்கத்தில் செய்கிறார்கள். அவசர தேவைகளில் தங்கத்தை அடமானம் வைத்து பணம் திரட்ட முடியும் என்பதாலேயே தங்கத்தில் மக்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்கிறார்கள்.
திருமண சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ள நிலையில், தங்கம் வாங்க விரும்பும் நகைப்பிரியர்கள் இப்போது ஆர்வமாக உள்ளனர். நேற்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800 ஆக விற்பனையானது. வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராமுக்கு ரூ.112 ஆகியது.
இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை மேலும் குறைந்தால், தங்கம் வாங்கும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மக்கள் வசதியாக தங்கத்தை வாங்கி சேமிக்கவும், முதலீடு செய்யவும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.