நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி தயாரிக்கிறது. ஒவ்வொரு நோட்டுக்கும் தனித்துவமான அடையாள எண் இருக்கும். இதில் சில நோட்டுகளின் எண்ணில் நடுவில் ஒரு சிறிய நட்சத்திர சின்னம் காணப்படும். இது போலி நோட்டின் அறிகுறியா அல்லது இந்த நோட்டின் மதிப்பு வேறுபட்டதா என்ற பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது.

இந்த நட்சத்திர சின்னம் உள்ள நோட்டு போலியானது எனும் கருத்து தவறானது. உண்மையில், இது முற்றிலும் சட்டப்பூர்வமானது. ரிசர்வ் வங்கி இந்த சின்னத்தைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே. தொடர்ச்சியாக அச்சிடப்படும் நோட்டுகளில் ஏதேனும் பிழை ஏற்பட்டால், அதை மாற்றுவதற்காக புதிய நோட்டு அச்சிடப்படும். இந்த மாற்று நோட்டுகளில் நட்சத்திர சின்னம் இடையே இடம் பெறும்.
இந்த சின்னம் உள்ள நோட்டுகள் 100 மற்றும் 1000 ரூபாய்தான் பெரும்பாலும் காணப்படுகின்றன. இது, அந்த நோட்டுகள் பிழை திருத்தி மீண்டும் அச்சிடப்பட்டவை என்பதை மட்டும் குறிக்கிறது. இந்த பணம் பயன்படுத்துவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. இந்த நடைமுறை 2006 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
RBI தன் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் இந்த நோட்டுகள் நடைமுறையில் செல்லுபடியாகும் என்றும், சந்தையில் வழக்கமாக பயன்படுத்தக்கூடியவைகளாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் யாரும் இதை மோசடியாகக் கருத வேண்டிய அவசியமில்லை. இந்த நட்சத்திரம் உள்ள நோட்டுகள் முற்றிலும் நம்பத்தகுந்தவை, மேலும் அதற்குரிய மதிப்பும் அப்படியே உறுதி செய்யப்பட்டிருக்கும்.
சில சமயங்களில், போலி நோட்டுகள் பற்றி செய்திகள் பரவுவதால் மக்கள் குழப்பம் அடைவது வழக்கம். ஆனால் நட்சத்திர சின்னம் உள்ள நோட்டுகள் தவிர்க்க வேண்டியவை அல்ல. இவை மிக பாதுகாப்பாக அச்சிடப்பட்டு, தரம் பரிசோதிக்கப்பட்ட பிறகே புழக்கத்திற்கு விடப்படுகின்றன. எனவே, இது தொடர்பான தவறான தகவல்களை நம்பாமல், உண்மையான தகவலை அறிந்து செயல்படுவது அவசியம்.