மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி அறிவிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான பங்கு விற்பனை மற்றும் சாதகமற்ற சர்வதேச சூழல் போன்ற முக்கிய தரவுகள் வெளியீட்டிற்காக சந்தை காத்திருந்தது. இதன் காரணமாக வங்கி மற்றும் ஐடி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,414 புள்ளிகள் (-1.90%) சரிந்து 73,198 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடு 420 புள்ளிகள் (-1.86%) சரிந்து 22,124 புள்ளிகளாகவும் உள்ளன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.385.94 லட்சம் கோடியாக சரிந்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ரூ. 9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
IndusInd Bank (-6.18%), Tech Mahindra (-5.83%), M&M (-4.27%), HCL Tech (-3.69%) ஆகியவை மிகப்பெரிய இழப்பை சந்தித்தன. குறிப்பாக, இன்ஃபோசிஸ், ஏர்டெல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதே சந்தையில் கடும் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.