சென்னை: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,10,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும், இறக்கமாகவும் உள்ளது. மார்ச் 3-ம் தேதி தங்கம் ஒரு பவுன் ரூ.68,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, ஏறுமுகம், சரிவு என தொடர்ந்து வந்த தங்கம் விலை, புதிய உச்சத்தை தொட்டு, பவுன் ரூ.69,960 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு புதிய அதிகபட்ச விலை ஒரு பவுண்டுக்கு ரூ. 70,160 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிரம்பின் வரி விதிப்பு, உலகப் பொருளாதார மந்தநிலை, தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 50,000-யை கடந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 70,000. ஒரே ஆண்டில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சாமானியர்களுக்கு தங்கம் விலைமதிப்பற்ற பொருளாக மாறி வருகிறது.