அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிவிதிப்புகளால் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு விலைகள் குறைந்து விட்டன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்புகளால் முதலீட்டாளர்களுக்கு 19.4 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் இந்த வரி முடிவுகள் இந்திய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளன.
இந்திய பங்குச் சந்தை ஏப்ரல் 7ம் தேதி 2600 புள்ளிகள் குறைவாக துவங்கியது. நிப்டி குறியீடு கடந்த வாரத்தில் 22,904.45 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 800 புள்ளிகளின் வீழ்ச்சியுடன் 22,075 புள்ளிகளில் வர்த்தகம் துவங்கியது.
பல்வேறு துறைகளில் விற்பனை காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் பலவீனமாக முடிவடைந்தன. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் அல்லது 2.95 சதவீதம் குறைந்து 73,137.90 ஆக இருந்தது. நிப்டி 742.85 புள்ளிகள் அல்லது 3.24 சதவீதம் குறைந்து 22,161.60 ஆக இருந்தது.