இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், விமான நிலையத்திலேயே தற்காலிக டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒரு மாத டிரைவிங் லைசென்ஸ் மூலம் சுற்றுலாப் பயணிகள் தாங்களாக வாகனங்களை ஓட்ட முடியும்.

ஆனால் கனரக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு இது செல்லாது. உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த லைசென்ஸை பெறலாம் என போக்குவரத்து துறை தலைமை அதிகாரி கமல் அமரசிங்க தெரிவித்தார். இந்த புதிய முயற்சி சுற்றுலாப் பயணிகள் வாகனம் வாடகைக்கு எடுப்பதை எளிதாக்கும் என அவர் கூறினார்.