வாஷிங்டன் நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், டென்வர் விமான நிலையத்தில் நிகழ்ந்தது. அமெரிக்கன் எர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ஜெட் விமானம் மியாமிக்கு புறப்பட இருந்த வேளையில், ஓடுபாதையில் திடீரென சக்கரத்தில் தீப்பற்றியது. இதில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.

தீ பரவத் தொடங்கியதும், விமான ஊழியர்கள் துடுப்பாக செயல்பட்டு பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினர். விமானத்தில் 173 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். அவசரகால சறுக்குப் பாதைகளை பயன்படுத்தி, அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது போன்ற தீவிபத்து விமானம் முழுவதும் பரவாமல் தடுக்கப்பட்டதிலேயே பெரிய அதிர்ஷ்டம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர பாதுகாப்பு படைகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயை விரைவில் கட்டுப்படுத்தியும், விமானத்தை பாதுகாப்பாகக் கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழப்பதே தீவிபத்தின் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கான காரணங்களை சிறப்புக் குழு ஆராயும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ததாகவும், ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் விமானப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விமானத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.