கனடா: குழந்தைகள் காப்பகத்தில் கிருமி தொற்று… கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் துவங்கிய கிருமித் தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனடாவின் கால்கரி நகரில், ஈ கோலை என்னும் நோய்க்கிருமியின் தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 38 பிள்ளைகள் மற்றும் ஒரு பெரியவரின் நிலைமை மோசமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 23 பேர் சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த தொற்று, கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்திலிருந்து துவங்கியது. ஆனால், குழந்தைகளின் உணவில் மோசமான கிருமிகள் கலந்தது எப்படி என்ற கேள்விக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதாவது, எங்கிருந்து இந்த நோய்க்கிருமி பரவியது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆயிரக்கணக்கானோருக்கு உணவு விநியோகிக்கும் ஒரு மைய சமையலறையிலிருந்து அந்த பாதிப்பு துவங்கியது தெரியவந்தது.