வாஷிங்டன்: டிரம்பின் நண்பரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஜான் போல்டன் அவரது இத்தகைய செயல்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்தியா மீது ஜனாதிபதி டிரம்ப் விதித்த வரிகள் அமெரிக்காவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
டிரம்ப் சீனா மீது கருணை காட்டியுள்ளார். அதே நேரத்தில், அவர் இந்தியா மீதான வரிகளை கடுமையாக்கியுள்ளார். இதன் காரணமாக, இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலக்கு சீனா. டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவின் இலக்கை பலவீனப்படுத்தியுள்ளது. டிரம்ப் இந்தியாவை விட சீனாவை ஆதரிக்கிறார். இது ஒரு பெரிய தவறு. பல தசாப்தங்களாக ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து இந்தியாவை விலக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் இப்போது ஆபத்தில் உள்ளன.
“ரஷ்யாவை காயப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட இரண்டாவது 25% வரி, இந்தியாவை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாகக் கொண்டுவரும். இது உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.