ஜகார்த்தா: போரின் பாதிப்பை எதிர்கொண்டு வருபவர்கள் தற்போது தற்காலிக உதவிக்கு முன்னுரிமை பெற்றுள்ளனர். இந்தோனேசியா, பாலஸ்தீனத்தில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக புகலிடம் அளிக்க முன்வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலின் மீது தாக்குதலைத் துவங்கியது. இந்த தாக்குதலால், 200க்கும் மேற்பட்டோரைக் கைதியாக பிடித்து கொண்டு சென்றனர். பதிலுக்கு, இஸ்ரேல் தன்னை தாக்கிய ஹமாஸை எதிர்த்து பெரும் தாக்குதலை நிகழ்த்தியது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 1.15 லட்சம் பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்தோனேசியா போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு தற்காலிகமாக அடைவு அளிக்க முடிவு செய்துள்ளது.
இந்தோனேசியா அரசு, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கிரேட் இந்தோனேசியா இயக்க கட்சி பொதுச்செயலாளர் அஹ்மத் முஸானி, “போரின் பாதிப்புக்கு உட்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தொழில்முறை திறன்களை மேம்படுத்த உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்” என கூறினார். இந்தோனேசியா, உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடாக, பாலஸ்தீன சுதந்திரத்தை தொடர்ந்தும் ஆதரித்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அவர்கள் தற்காலிகமாக இந்தோனேசியாவில் தங்கி போரின் பாதிப்புகளை எதிர்கொண்டு மீள உதவியும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் முடிவுக்குப் பிறகு, அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியும்.
இந்தத் திட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் நஹ்த்லதுல் உலமா மற்றும் முஹம்மதியா ஆதரவு அளித்துள்ளன. விமானங்களை அனுப்பி, பாதிக்கப்பட்ட மக்களை இந்தோனேசியாவுக்கு அழைத்து வருவதற்கான தயாரிப்புகளையும் இந்தோனேசியா ஆரம்பித்து உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் சுகியோனோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தோனேசியா அதிபர் பிரபோவோ கபியாண்டோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, கத்தார் மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று, நீண்டகால மோதலுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்தார். தற்போது, பாலஸ்தீன சுதந்திரத்திற்கு இந்தோனேசியாவின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.