இஸ்ரேல், ரம்ஜான் பண்டிகை காலத்தில் பாலஸ்தீனில் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023 அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 பேர் பிணைக்கைதிகளாக கடத்தப்பட்டனர். இதன் பின்னணியில், இஸ்ரேல் கடந்த 15 மாதங்களாக காசாவில் தாக்குதல் நடத்தி, 48,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பின் முயற்சியுடன், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 அன்று முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தம் படி, பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு மற்றும் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்து வருகின்றன. இந்த போர் நிறுத்தம் விரைவில் முடிவடைய உள்ளது.
ரம்ஜான் பண்டிகை காலத்தில், காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த முடிவு, போர்நிறுத்தத்தின் முதல் கட்டம் காலாவதியான தருவாயில் எடுக்கப்பட்டது. “மத விடுமுறை நாட்களில் பதட்டங்களைத் தணிப்பதே தற்காலிக போர்நிறுத்தத்தின் நோக்கமாகும்” என அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இத்துடன், ரம்ஜான் மாதத்தை உலகெங்கிலும் உள்ள பலர் பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்துடன் வரவேற்றபோது, இந்த தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.