
உக்ரைன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் முக்கிய இராணுவ விமானத் தளங்களை குறிவைத்து பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து நடத்தப்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது முற்றிலும் நியாயமான நடவடிக்கையாகும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

“ஸ்பைடர்ஸ் வலை” என்ற குறியீட்டுப் பெயருடன் நடந்த இந்த ஆபரேஷனில் 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். ரஷ்யாவின் முக்கிய விமான தளங்களில் உள்ள மூலோபாய கப்பல் ஏவுகணை கேரியர்கள் தாக்கப்பட்டதாகவும், கடந்த ஒரு ஆண்டு ஆறுமாதங்களுக்கு முன் அவர் அங்கீகரித்த திட்டம்தான் இப்போது விளைவு கொடுத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்காக ஒத்துழைத்தவர்கள் தாக்குதலுக்கு முன்பே பாதுகாப்பாக ரஷ்ய எல்லிகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், மக்கள் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி எச்சரித்தார். சுமார் 500 ரஷ்ய ட்ரோன்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடற்படை விமானக் கப்பல்களிலிருந்து எப்படியும் கலிபர் ஏவுகணைகள் தாக்குவதற்கான தயாரிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்றும், ரஷ்யா எப்படிப் பணியாற்றுகிறது என்பதை உக்ரைன் அறிவதாகவும், அவர்களின் மக்களை பாதுகாப்பதற்காக எல்லா வழிகளையும் பயன்படுத்துவதாகவும் ஜெலென்ஸ்கி உறுதியளித்தார். உக்ரைன் யுத்தம் விரும்பவில்லை என்றும், மார்ச் 11ஆம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா முன்மொழிந்த நிர்பந்தமற்ற போர்நிறுத்தத்துக்கு வாய்ப்பு இருந்த போதும், ரஷ்யாவே அதனை நிராகரித்து போரைத் தொடரத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.
இஸ்தான்புல்லில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு நாள் முன்பாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முக்கிய விமானத் தளங்களில் இருந்த எதிரி குண்டுவீச்சு விமானங்களை அழிப்பதே இந்த தாக்குதலின் நோக்கம். கிழக்கு சைபீரியாவைச் சேர்ந்த பெலாயா, ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒலென்யா, மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவோ ஆகிய விமான தளங்கள் இந்த தாக்குதலின் இலக்குகள் ஆகியன.
2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் தீவிரமடைந்து வருகின்றது.