சென்னை: ஜெர்மனியில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்கள் பணிபுரிய வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
நர்சிங்கில் பிஎஸ்சி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். குறைந்தது 6 மாத பணி அனுபவம் தேவை. மாத சம்பளம் ரூ. 2 லட்சம் வழங்கப்படும். B-1, B-2 நிலைகளில் இலவச ஜெர்மன் மொழிப் பயிற்சி வழங்கப்படும். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி நகல், அனுபவம், பாஸ்போர்ட், வெள்ளைப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அடங்கிய விண்ணப்பத்தை omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) காணலாம். 044-22505886 / 63791 79200 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்றார்.