ஜெருசலேம்: அமெரிக்காவுடன் இஸ்ரேலுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவாக மறுப்பு தெரிவித்தார். சமீபத்தில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றார். இந்த பயணத்தில் பல்வேறு

வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆனால், இஸ்ரேலுக்குப் போகாதது கவனத்தைக் கவர்ந்தது.இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே உறவு மோசமாகி விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இஸ்ரேல் மீது அமெரிக்கா ஆதரவு குறைந்துவிட்டதா என்பது பற்றி செய்திகள் வெளியானது.
ஆனால் இவை அனைத்துக்கும் மறுப்பாக, நெதன்யாகு நேரடியாக விளக்கம் அளித்தார். தனது அண்மைய உரையில், பத்து நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்புடன் நேரில் உரையாடியதாக அவர் தெரிவித்தார்.அந்த உரையாடலில், இஸ்ரேலுக்கு முழு ஆதரவு வழங்குவதாக டிரம்ப் உறுதி அளித்ததாக நெதன்யாகு கூறினார்.
இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பிளவு எதுவும் இல்லை என்பதும் தெளிவாகியுள்ளது. இஸ்ரேலுக்குப் பயணம் செய்யாதது திட்டமிடலின் ஒரு பகுதி மட்டுமே எனவும் அவர் விளக்கியுள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் மதிப்பிலான ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இந்தத் தொடர்புகள் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.