லண்டன்: புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்று, உலக இலக்கிய வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். அவரது புத்தகம் “ஹார்ட் லேம்ப்” இந்த விருதை பெற்றது. இதன் மூலம் புக்கர் விருது வென்ற முதல் கன்னட எழுத்தாளராவதோடு, இந்திய எழுத்துலகிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிறந்த பானு முஷ்டாக், தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படித்திருக்கும் ஆழ்ந்த அறிவாளி. சமூக அரசியல், மனித மனக் கூறுகள், பெண்கள் வாழ்க்கை போன்ற பல பரிமாணங்களில் அவருடைய படைப்புகள் மக்களுக்கு தீவிர சிந்தனையை ஏற்படுத்தியுள்ளன.
பானு முஷ்டாக் எழுதிய “ஹசீனா மற்றும் அதர் ஸ்டோரிஸ்” என்ற சிறுகதை தொகுப்பு, கன்னடத்தில் வெளிவந்தது. அதை பத்திரிகையாளர் தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் “Heart Lamp” என மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு புத்தகம் உலகளாவிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்புத்தகம், மனிதர்களின் மனநிலைகள், உருக்கமான வாழ்வியல் உணர்வுகள் மற்றும் நவீன சமூக சூழ்நிலைகளின் தாக்கங்களை பிரதிபலிக்கிறது. அதன் தனித்துவமான எழுத்து பாணி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைச்சொல்லல் காரணமாக, புக்கர் பரிசுக்கான பட்டியலில் இது தேர்வானது.
‘தி இங்கிலிஷ் பென் 2024’ விருதையும் இதற்காகப் பெற்றிருந்த பானு முஷ்டாக், புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற ஆறுபேர் எழுத்தாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியில் அவரது புத்தகம் விருதுக்கு உரியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் பானு முஷ்டாக், புக்கர் பரிசுடன் ரூ.56 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றுள்ளார். இவரது சாதனை, கன்னட இலக்கியத்திற்கும் இந்திய மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த வெற்றியை இலக்கிய உலகம் மட்டுமல்ல, சமூக அரசியல் பிரதேசங்களும் பெரிதும் பாராட்டி வருகின்றன. புக்கர் பரிசு பெற்ற இந்த நூல், தமிழிலும் விரைவில் மொழிபெயர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.