நியூயார்க்: அமெரிக்காவின் ஐ.நா. பொதுச்சபையின் 80-வது கூட்டத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் கலந்து கலந்து பங்கேற்றார். இரண்டாவது முறையாக அதிபரான பின்னர் ஐநாவில் பேசும் இவருக்கு, நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) மற்றும் டெலிபிராம்ப்டர் செயல்படாமல் இருந்தது பெரிய பிரச்சனையாகி, அவர் கடும் கோபம் அடைந்தார்.
நகரும் படிக்கட்டு வழியாக மேல்தளத்திற்கு செல்லும் போது, டிரம்ப் மற்றும் மெலனியா கால் வைத்து ஏறியபோது படிக்கட்டு திடீரென நின்றுவிட்டது. சில விநாடிகள் காத்திருந்தாலும் அது இயங்கவில்லை. பிறகு அவர்கள் மேலே நடந்து சென்றனர். மேலும், உரை படிக்க உதவும் டெலிபிராம்ப்டர் செயல்படவில்லை, இது டிரம்புக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.
டிரம்ப் இதற்கு நகைச்சுவையாக பதிலளித்து, “டெலிபிராம்ப்டர் யார் இயக்குகிறாரோ அவர் பெரிய சிக்கலில் மாட்டுவார். எங்கள் உடல் நிலை நல்லது, அதனால் நன்றாக இருக்கின்றோம்” என உரையாற்றினார். பின்னர், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குடரசை, நகரும் படிக்கட்டு மற்றும் டெலிபிராம்ப்டர் செயல்படாததை டிரம்புடன் சுட்டிக்காட்டினார்.
பின்னர் விசாரணையில், நகரும் படிக்கட்டு உச்சியில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு பொத்தானை அமெரிக்க வீடியோ கேமராமேன் தவறுதலாக அழுத்தியதால் படிக்கட்டு நிறுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை சமாளித்து, டிரம்ப் நிகழ்வை நகைச்சுவையாகப் பேசி சமாளித்தார்.