அமெரிக்காவை அதிரவைத்துள்ள செய்தி ஒன்று தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனாவின் யுன்கிங் ஜியான் மற்றும் ஜுன்யோங் லியு என்ற இருவர், ‘ஃபுசாரியம் கிராமினேரம்’ என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவுக்குள் கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பூஞ்சை குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர். கொரோனாவை விட மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த பூஞ்சை மிகவும் அமைதியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால், அதனால் உருவாகும் பொருளாதார இழப்புகள் பில்லியன் கணக்கில் இருக்கும் என்றும், உடல்நல பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதில் முக்கியமாக கல்லீரல் பாதிப்பு, வாந்தி, மலட்டுத்தன்மை போன்றவை அடங்கும். இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் வேளாண்மை மற்றும் சுகாதார துறைகளும் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளர் கோர்டன் சாங், இந்த பூஞ்சையை பயங்கரவாத வேளாண்மை ஆயுதமாகவே விவரிக்கிறார். இந்த பூஞ்சையை சீனா திட்டமிட்டு கொண்டு வந்திருக்கலாம் என்றும், இது பரவியிருந்தால் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இப்பூஞ்சை தொடர்பாக பல நாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
முன்பு உலகத்தை மூன்றாண்டு முடக்கிய கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பல சந்தேகங்கள் நிலவுகின்றன. தற்போது ஃபுசாரியம் கிராமினேரம் எனும் பூஞ்சை தொடர்பான தகவல்கள் மீண்டும் அதே சந்தேகங்களை தூண்டியுள்ளன. இது எதிர்காலத்தில் கொரோனாவை விட மிக மோசமான நிலையை உருவாக்கக்கூடும் என்ற பயம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இனி இந்த பூஞ்சையின் விபரங்களை அடையாளம் காண்பதும், தடுக்கும் முறைகளை உருவாக்குவதும் மிக முக்கியமாகின்றன.