பீஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியான குய்ஷோ மாகாணத்தில் ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம் எனப்படும் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் கடல்மட்டத்தில் இருந்து 2,051 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கிடையே 4,658 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பாலத்தை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் பிடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன் அதே மாகாணத்தில் அமைந்திருந்த பெய்பன்ஜியாங் பாலமே உலகின் மிக உயரமானதாக கருதப்பட்டது. அதன் 1,854 அடி உயரத்தை ஹுவாஜியாங் பாலம் முந்தியுள்ளது. புதிய பாலம் திறக்கப்பட்டதால், அந்தப் பகுதியின் இரண்டு இடங்களுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நிமிடமாக குறைந்துள்ளது என மாகாண போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான குய்ஷோ மாகாணம், தற்போது உலகின் இரண்டு மிக உயரமான பாலங்களையும் கொண்டுள்ள பெருமையை பெற்றுள்ளது. உலகின் 100 உயரமான பாலங்களில் பாதிக்கும் மேற்பட்டவை சீனாவின் குய்ஷோவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.