ஒட்டாவா: அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போரின் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவை மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகத் திகழ்கின்றதாக விமர்சித்துள்ளார். அவரது இந்த கருத்து, இரு நாடுகளுக்கு இடையே பல நிலைகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக பொறுப்பு ஏற்ற பிறகு, டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், கனடாவின் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை உயர்த்துவது பெரும் அடுத்தகட்டமாக இருந்தது. இதற்கு பதிலாக, கனடாவும் அதே வண்ணம் அதிக வரி விதித்தது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவுகிறது.
பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில, டிரம்ப் கூறியதாவது: “நான் ஒவ்வொரு நாட்டுடனும், மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு வைத்துள்ளேன். கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்கள் மானியம் வழங்குவதால், அமெரிக்காவின் கனடா 51வது மாநிலமாக இருக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு கனடாவின் பொருட்கள் தேவை இல்லை. அவர்களின் ஆற்றல்எங்களுக்கு எதுவும் தேவையில்லை.”
கனடாவை மிக மோசமான நாடுகளில் ஒன்று எனக் கூறிய டிரம்ப், “உண்மையில், கனடாவின் லிபரல் கட்சியின் ஆட்சியை சமாளிப்பது எளிது என்று நான் நினைக்கிறேன்,” எனவும் கூறினார்.
இந்தப் பேட்டி, கடந்த மாதம், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு, லிபரல் கட்சி தலைவர் மார்க் கார்னி வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பு ஏற்ற நிலையில் வந்துள்ளது. டிரம்ப், ட்ரூடோவை ‘கவர்னர் ட்ரூடோ’ என பலமுறை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.