வாஷிங்டன்: அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசியுள்ளனர். சந்திப்பின்போது, டிரம்ப் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
டிரம்ப், கடந்த ஜனவரி 20ல் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், ‘உலகில் போர் நடக்க விட மாட்டேன்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்து, அவரை அமெரிக்காவிற்கு அழைத்து வந்தார். அந்த அழைப்பை ஏற்று, பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வந்தடைந்தார்.
பின்னர் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் போர் நிறுத்தம், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை ஆலோசனை செய்தனர்.
தொடர்ந்து, இருவரும் ஒரு கூட்டத்தில் நிருபர்களை சந்தித்தபோது, டிரம்ப் கூறியதாவது: “தேவைப்பட்டால் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் நமது ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்.” மேலும், காசா பகுதியின் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்றி, அங்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வீடுகளையும் உருவாக்கப்படும் என்று கூறினார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு : “அதிபர் டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடியது. அவர் காசாவிற்கு புதிய எதிர்காலத்தை கற்பனை செய்கிறார். இது மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்