சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதனுடன், நாடு முழுவதும் 21 உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருவார்.

இந்த பரிந்துரை புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவியேற்ற பிறகு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மூன்று மாநில நீதிபதிகள் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அஞ்சார்யா, ராஜஸ்தான் நீதிபதி விஜய் விஷ்ணு, மும்பை நீதிபதி சந்துருகர் ஆகியோர் அந்த பட்டியலில் உள்ளனர்.தெலுங்கானா நீதிபதி சுஜோய் பால் கொல்கத்தாவிற்கு, கர்நாடக நீதிபதி காமேஸ்வர் ராவ் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜமீரை லனுசுங்கும், மனாஷ் ரஞ்சன், நிதின் வாசுதேவ் சாம்ப்ரே ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அலகாபாத் நீதிபதி அஸ்வினி மிஸ்ரா பஞ்சாப் ஹரியானாவிற்கு, சுமன் ஷியாம் மும்பைக்கு, சஞ்சீவ் பிரகாஷ் ராஜஸ்தானிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விவேக் சவுத்ரி டெல்லிக்கு, தினேஷ் குமார் கர்நாடகாவிற்கு, விவேக் குமார் மத்தியப் பிரதேசத்திற்கு நியமிக்கப்படுகிறார்.பட்டு தேவானந்த் ஆந்திரா, ஓம் பிரகாஷ் சுக்லா டெல்லி, சந்திரசேகர் மும்பை ஆகியோர் பணியிட மாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
சுதிர் சிங் பாட்னாவிற்கு, அணில் சேதர்பால் மற்றும் அருண்குமார் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஜெயந்த் பானர்ஜி கர்நாடகாவிற்கும், சுமலதா, லலிதா மற்றும் அன்னி ரெட்டி தெலுங்கானாவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த பரிந்துரைகள் நீதிமன்றங்களில் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.இந்த பரிந்துரைகள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் பல மாநிலங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.இது நீதிமன்றங்களில் வேகமான தீர்ப்பு செயல்முறைக்கான அடித்தளமாக அமையலாம்.இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து காண வேண்டும்.