மும்பை: டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், வங்கிகளில் கிளர்க் உள்ளிட்ட நடுத்தர பணிகளுக்கான தேவை விரைவில் மறைந்துவிடும் என ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நாணயம் மற்றும் நிதி என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நிதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் வருமாறு:
* டிஜிட்டல் மயமாக்கல் வங்கித் துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ரிமோட் வேலைகளை பரப்புகிறது. ஆட்டோமேஷன் மூலதனத்திற்கும் தொழிலாளர் ஊதியத்திற்கும் இடையிலான இடைவெளியை விரிவுபடுத்துவதால், குறைந்த திறனுக்கான ஊதியம் குறைவு; உயர் திறமைக்கு அதிக ஊதியம் கிடைக்கும் இடத்தில் வேலை சந்தை உருவாக்கப்படுகிறது. அதே நேரத்தில், தொழில்நுட்பம் நடுத்தர வேலைகளை மறையச் செய்கிறது.
* 2010-2011 நிதியாண்டில் தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு 50:50 என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால், FY 2022—23 இல், அதே விகிதம் 74:26 ஆக மாறியுள்ளது.
* உலகளவில், வங்கித் துறையில் கீழ்மட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து, தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
* இந்தியாவின் வேலை சந்தையில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டவர்கள் மிகவும் மதிக்கப்படுகிறார்கள். 2023ல் மொத்த பணியமர்த்தலில் 16.80 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வேலைகள் வழங்கும்.
* இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 2026ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக வளர்ச்சியடையலாம்.