புது டெல்லி: 2021-2022-ம் ஆண்டில் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக நடிகையும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், “கங்கனா அளித்த விளக்கத்தை வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவில் பரிசீலிக்க முடியாது.
அதற்கு பதிலாக, வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவும். இதை போதுமான ஆதாரமாகக் கருத முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறி கங்கனா ராவத் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்து, மனு வாபஸ் பெறப்பட்டது.