சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் நவம்பரில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டதால், தேர்வுக்குத் தயாராக முடியவில்லை என்று கூறி பல விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இன்று காலை நீதிபதி முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வுக்கு விண்ணப்பித்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே, இப்போது தேர்வை ஒத்திவைப்பது விண்ணப்பதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழக அரசு விளக்கமளித்தது.
விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதி, தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்று கூறினார். அரசின் வாதத்தை ஏற்று, முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.