ஓசூர்: ஓசூர் மாநகராட்சி ஜூஜூவாடி சிப்காட் தளத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
ஆண்டு முழுவதும் நடக்கும் பணியால், பீக் ஹவர் எனப்படும் வார இறுதி, காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல பல மணி நேரம் ஆகும்.
இந்நிலையில், நேற்று அத்திப்பள்ளி மாநில எல்லையில் இருந்து ஓசூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள், கார், ஜீப், இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
அதேபோல், ஆம்புலன்ஸ் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், போலீசார் மிகுந்த சிரமத்துக்கு இடையே ஆம்புலன்சை மீட்டனர். தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இந்த சாலையில் நடந்து வரும் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.