ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் தனது வகுப்பறையில் மாணவர்களால் மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சில மாணவர்கள், தரையில் படுத்திருக்கும் ஆசிரியையின் மேல் ஏறி நின்று, அவரது கால்கள் மற்றும் உடலை மசாஜ் செய்கின்றனர். மாணவர் தடுமாறி ஆசிரியர் மீது விழக்கூடாது என்பதற்காக மசாஜ் செய்யும் மாணவனின் கையை மற்றொரு மாணவர் பிடித்துள்ளார்.
இதனால் மாணவன் ஆசிரியருக்கு மசாஜ் செய்து கொண்டிருக்கும் போது மற்றொரு ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து சிரித்து கொண்டிருப்பதை காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பொறுப்பற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை விமர்சித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் அஞ்சு சவுத்ரி கூறுகையில், ‘வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
சம்பந்தப்பட்ட ஆசிரியை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரது கால்களை மசாஜ் செய்யுமாறு மாணவர்களிடம் கூறியிருக்கலாம். இருப்பினும் இது குறித்த உண்மை நிலையை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்றார்.
மேற்கண்ட சம்பவம் குறித்து மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், ‘பள்ளிகளில் இதுபோன்ற நடத்தையை அனுமதிக்க முடியாது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.