வர்ஜீனியா: அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் முயற்சியில் தனது பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், அதன் பணியாளர்களில் 10 சதவீதத்தை பணிநீக்கம் செய்வதாக நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது பணி நீக்கம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 17 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். நிதி நெருக்கடி காரணமாக போயிங் தனது புதிய தயாரிப்புகளை ஒத்திவைத்துள்ளது.
2025-ல் 777X ஜெட் விமானத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. இப்போது 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் போயிங் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம் செய்தனர். இதனால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், அந்நிறுவனப் பங்கின் விலையும் சரிவைக் கண்டது.