சென்னை: திருப்பரங்குன்றம் முருகனை வைத்து உங்கள் அரசியல் பலிக்காது என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை சென்னையில் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் மக்களுக்கு எதிராக மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கக்கூடாது.
ஜனநாயகம் என்பது நமது கொள்கை, அதை சீர்குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். பா.ஜ.க., கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் எவ்வளவு அறிவுரை கூறியும், அவர்கள் மாறுவதாக தெரியவில்லை. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக வருவதற்கு அனைத்து குறுக்குவழிகளையும் பயன்படுத்தி வருகின்றனர். உங்கள் அரசியல் முருகனிடம் வேலை செய்யாது. அயோத்தியில் கலவரத்தை முடித்து வைத்தவர்கள், நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் தோல்வியடைந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை தொடங்கியுள்ளனர்.
வட மாநிலங்களில் மதவாத அரசியல் தோல்வியடைந்து வருகிறது. திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றவும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் தமிழகத்தில் உள்ளூர் மக்களுக்கு எதிராக வெளியாட்கள் ஒரு கும்பல் போராட்டம் நடத்தியதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை மத நல்லிணக்க வழிபாடு நடைபெறுகிறது. நாளை திருப்பரங்குன்றம் கோவிலையும் சிக்கண்டரையும் வணங்குவோம் என்றும் கூறினார்.