நாகர்கோவில்: தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. டி-பார்ம் மற்றும் பி-பார்ம் வைத்திருக்கும் தொழில்முனைவோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், விண்ணப்பித்தவர்கள், மருந்தக உரிமம் பெற்று, சொந்தமாகவோ அல்லது வாடகை கட்டடத்திலோ, முதல்வர் மருந்தக நிறுவனத்தை துவக்க அறிவுறுத்தப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் TNCCF உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் மற்றும் முதல் தவணையாக ரூ. 1.5 லட்சம் விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 2-வது கள சரிபார்ப்புக்குப் பிறகு, மானியத்தின் இறுதித் தவணை ரூ.100 மதிப்புள்ள ஜெனரிக் மருந்துகளின் இருப்பு வெளியிடப்படும். 1.5 லட்சம். கூட்டுறவு வங்கிகள் மூலம் வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் மருந்தகத்திற்குத் தேவையான ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேத, இம்காப்ஸ், டோம்கால் மற்றும் யுனானி மருந்துகள், அறுவை சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் போன்றவை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, முதல்வர் மருந்தகத்திற்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மட்டும் 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகர்கோவில் அருகே முகிலன்விளையில் கூட்டுறவுத்துறை சார்பில் முகிலன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகப் பணிகளை குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர் மற்றும் மருந்தாளுனர்களுக்கு அரசு மானியமாக ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு மானியமாக ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.
இதில், 50 சதவீதம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், 50 சதவீதம் மருந்துகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து பிப்ரவரி 15-ம் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.