பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் குல்பூர் செக்டாரில் நேற்று காலை 11:00 மணியளவில் நமது ராணுவ வீரர்கள் மீது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியதா அல்லது அடர்ந்த காட்டில் ஒளிந்துகொண்டு நம் நாட்டிற்குள் ஊடுருவக் காத்திருந்த பயங்கரவாதிகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கு நமது ராணுவம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் நம் நாட்டிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தற்போது, நமது ராணுவத்தின் விசாரணை நடந்து வருகிறது.