புனே: ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது புகார்… புனேவில் அதிகாரி துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான சாதிச் சான்றிதழ் அளித்ததாக புகாரில் சிக்கியுள்ள இளம் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கரை, பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில் பணியிட இடமாற்றம் செய்து மகாராஷ்ட்ர அரசு உத்தரவிட்டுள்ளது.
UPSC தேர்வுகளில் மனநல சிகிச்சை பெறுபவர் என்ற பொய்யான தகவலுடன் சலுகை, அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளாகியுள்ளார்.
பயிற்சியின்போதே தனது காரில் சிவப்பு, நீல விளக்கு; தனிஅலுவலம் என செல்வாக்கு’ காட்டியதாக கூறப்படுகிறது. எனினும் பூஜாவின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.