லண்டனில் சிம்பொனி நடத்திவிட்டு திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ. பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:- இனிய தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் மீண்டும் சிம்பொனியை அரங்கேற்றியுள்ளார் இளையராஜா.
அவர் முதன்முதலில் சிம்பொனி இசையமைத்தபோது இந்தியாவில் தொலைக்காட்சியோ வானொலியோ செய்தி வெளியிடவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசை கடுமையாகக் குற்றம் சாட்டினேன். யாராலும் செய்ய முடியாத சாதனையை இளையராஜா செய்திருக்கிறார் என்ற உண்மையை ஊடகங்கள் வெளியிடாமல் இருப்பது மன்னிக்க முடியாதது என்று கடுமையாகப் பேசினேன்.

அதன் பிறகு மதுரையில் அவருக்கு விழாவுக்கு ஏற்பாடு செய்தேன். இதற்காக எனக்கு ஒரு கவிதையும் எழுதினார். அவருடைய சிம்பொனி வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டேன். நான் பேசும் போது உணர்ச்சிவசப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று விசில் அடித்தார். இளையராஜா இன்னும் புகழ் பெற வேண்டும். அவரை தமிழக அரசு வரவேற்றுள்ளது. அவரை டெல்லிக்கு அழைத்துப் புகழ் பெற்றிருக்க வேண்டாமா? அந்த ஞானம் மத்திய பாஜக அரசுக்கு இல்லை. இவ்வாறு வைகோ கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.