வந்தவாசி: வந்தவாசி அருகே ஏரிக்கரை மீது பல்லாண்டு காலமாகப் புதைந்திருந்த சிவன் கோயில் தென்பட்டுள்ளது. இதை கையகப்படுத்தி புனரமைக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தில் ஏரிக்கரையில் புதைந்திருந்த பழமையான கோயில் ஒன்று கரை சீரமைப்புப் பணியின்போது வெளிப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்த கோயிலை புனரமைக்க அறநிலையத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருங்கல் மண்டபம், செங்கல் கோபுரத்துடன் கூடிய சிவ ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.