சென்னை: கே.பி. விஜய்யின் ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய ஜெகன், தற்போது ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, நடித்து வருகிறார். S.K செல்வகுமார் தயாரித்துள்ளார். குடும்பமே கொண்டாடிய ‘மாயாண்டி குடும்பத்தார்’ வெற்றிப் படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் சார்பில், படத்தின் தொடக்க விழா மற்றும் டைட்டில் டீசர் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோயிலில் நடந்தது.

மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். படம் பற்றி பேசிய கே.பி. ஜெகன் கூறுகையில், ‘என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை எழுதியுள்ளேன். இதற்கு முன் பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன், முதல்முறையாக கதையின் நாயகனாக நடிக்கிறேன். அனைவரையும் கவரும் வகையில் படம் உருவாகி வருகிறது’ என்றார்.