கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடி, தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த மழையின் காரணமாக, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் உள்ள கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர், கானூர், பேரூர், காவாலக்குடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குருவை பருவ நெல் பயிரிடப்பட்ட சுமார் 250 ஏக்கர் வயல்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இது குறித்து, முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் விளைநிலங்கள் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். நாங்கள் கடன் வாங்கி, போர்வெல்களில் குருவை விவசாயம் செய்துள்ளோம்.

தேங்கி நிற்கும் நீர் காரணமாக, பயிர்கள் அழுகிவிட்டன. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். அண்ணாமலை நகர் 117 மி.மீ., லால்பேட்டை 107 மி.மீ., வேப்பூர் 107 மி.மீ., ஸ்ரீமுஷ்ணம் 89.1 மி.மீ., சிதம்பரம் 85.8 மி.மீ., விருத்தாசலம் 76 மி.மீ., காட்டுமன்னார்கோவில் 75.4 மி.மீ., புவனகிரி 59 மி.மீ., பரங்கிப்பேட்டை 55.4 மி.மீ., சேத்தியாத்தோப்பு 54 மி.மீ., கடலூர் 40 மி.மீ., பண்ருட்டி 36 மி.மீ., குறிஞ்சிப்பாடி 27 மி.மீ. மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெப்ப அலைகளும் வீசின. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், இந்த மழை மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.