‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு நடிகர் ஆதி பதிலளித்துள்ளார். அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சப்தம்’ படம் பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு அளித்த பேட்டியில் ‘மரகத நாணயம் 2’ குறித்த கேள்விக்கு ஆதி பதிலளித்துள்ளார்.
‘மரகத நாணயம் 2’ படத்தை விரைவில் தொடங்கவுள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முதல் பகுதி அணியுடன், ஒரு பெரிய அணியும் சேர்ந்துள்ளது. முதல் கதை சிறியதாக இருந்தது, இரண்டாம் பாகத்தின் கதை பெரிதாக இருக்கும். முதல் பாகத்தில் பொறுப்புடன் பணியாற்றியது போல், இரண்டாம் பாகத்திலும் பணியாற்றுவோம்.
நல்ல படமாக அமையும் என்பதில் உறுதியாக உள்ளோம்,” என்றார். ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். 2017-ல் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.