சென்னை: லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனுஷிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும். கதையை கேட்டு தனுஷ் மிரண்டு விட்டதாகவும் அந்த படம் தனுஷின் அடுத்தப்படமாக இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். நடிகராக இருந்து இயக்குநராக உயர்ந்த தனுஷ் இயக்கத்தில் தற்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
அதை தாண்டி குபேரா படத்தில் நடித்தும் வருகிறார். மேலும், அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 – ம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், அடுத்து தனுஷ் எந்த இயக்குநர் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், அடுத்து தனுஷ் நடிக்கப்போகும் படம் குறித்து தற்போது ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
அதாவது லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனுஷிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும். கதையை கேட்டு தனுஷ் மிரண்டு விட்டதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும். இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.