‘கராத்தே பாபு’ என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் என்று நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார். சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரவி மோகன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் ஒரு நேர்காணல் அளித்தார். அதில், தனது அடுத்த படங்கள் குறித்து பேசினார். “‘கராத்தே பாபு’ படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டோம். இன்னும் சில காட்சிகள் மட்டுமே உள்ளன. அந்தப் படத்தில் இருப்பது போல் நான் என்னைப் பார்த்ததில்லை. புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்க விரும்பினேன். அது ‘கராத்தே பாபு’ படத்தில் நடக்கும். அந்தப் படம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.

‘ஜீனி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அதை விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம். சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தில் நான் நடிக்கிறேன். அதில் அது ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லலாம். அதில் சில புதிய விஷயங்களை முயற்சி செய்து வருகிறேன்.”