ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “எனக்கு நண்பர்கள் இருந்தனர். ஆனால் நான் எப்போதும் பின்தங்கியே இருந்தேன். அதிக நேரம் கிடைத்தாலும், என் வேலையில் ஆழ்ந்து இருப்பேன். ஒரு பாடலை உருவாக்க 8 மணி நேரம் ஆகும் என்று தெரிந்தாலும் நான் நிறுத்த மாட்டேன். அதைத் தாண்டி தொடர்ந்து பாடுபடுவேன். அதிக நேரம், சிறந்த வேலை, சிறந்த திருப்தி.
இது தான் என்னுடைய தாரக மந்திரம். நான் என் வேலையில் ஈடுபடும்போது, நான் ஒரு வித போதையை போல் உணர்கிறேன். என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன், மேலும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறேன்.

இசையின் புதிய உலகில் நுழைய எல்லா முயற்சிகளையும் செய்ய விரும்புகிறேன். இப்படியே 30 வருடங்கள் ஓடிவிட்டன. நான் என் நண்பர்களை நேசிக்கிறேன். நான் மருத்துவமனையில் இருப்பதாகக் கேள்விப்பட்டதும் பல பாடகர்கள், இயக்குநர்கள், எல்லோரும் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.