
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு கடந்த 19-ம் தேதி விவாகரத்து அறிவித்தார். இதை ஏஆர் ரஹ்மானும் தனது எக்ஸ் இணையதளத்தில் உறுதி செய்திருந்தார். இதனிடையே, சைரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருவரின் விவாகரத்துக்குப் பிறகு, குழந்தைகள் யாருடன் தங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், அவர்கள் வளர்ந்த பிறகு முடிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த முடிவை எடுப்பதற்கு முன், அவர்கள் இருவருக்குள்ளும் சமரசம் ஏற்படாது என்று ஒரு போதும் கூறவில்லை. விவாகரத்து விவகாரத்தில் ஜீவனாம்சம் பற்றி ஏதாவது பேசப்பட்டதா? இந்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க விரும்பாத வந்தனா ஷா, சாய்ரா பண ஆசை கொண்டவர் அல்ல என்றும் கூறியுள்ளார்.