‘மௌனகுரு’ திரைப்படத்துக்குப் பிறகு சாந்தகுமார் எட்டு ஆண்டுகள் கழித்து இயக்கிய படம் என்பதால் ‘மகாமுனி’ திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. ஆனால் படம் வெளியானபோது அதன் திரைக்கதை பற்றிய விமர்சனங்கள் காரணமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும், வெளியீட்டுக்குப் பிறகு பல விருது விழாக்களில் இந்த படம் பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சாந்தகுமார் இயக்கிய அடுத்த படம் ‘ரசவாதி’, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் ஜி எம் சுந்தர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், திரையரங்குகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னர் ஓடிடி தளத்தில் வெளியானது.
படக்குழுவினர் ‘ரசவாதி’யை பல திரைப்பட விழாக்களில் அனுப்பி வந்தனர். தற்போது, இந்த படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தாதா சாகேப் பால்கே திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். இதுவே இந்தப் படத்துக்காக அவர் பெற்ற மூன்றாவது விருது என்பதும் குறிப்பிடத்தக்கது.